நாட்டில் இன்று மேலும் 300 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இதுவரையில் இலங்கையில் கொவிட் நோயிக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதன்படி இதுவரையில் மொத்தமாக 48ஆயிரத்து 140 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
Advertisement
இன்றைய தினம் மேலும் 487 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.