யாழ்.பண்ணாகம் பகுதியில் வீடொன்றை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த சுமார் 16 பவுண் நகைகள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளர் கொல்லங்கலட்டிக்கு தோட்ட வேலைக்கு சென்றுள்ள நிலையில் வீட்டு கதவினை உடைத்து உட்புகுந்த கொள்ளையர்கை் நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
Advertisement
சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.