கணவனுடன் வாய்த்தர்க்கம் முத்தியதால் 25 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளம்யுவதி!

​திருகோணமலை கந்தளாய் பகுதியில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில்

25 மாத்திரைகளை உட்கொண்ட மனைவி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பகல் நடைபெற்றுள்ளதாக

கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்

குறித்த யுவதி கடந்த வருடம் திருமணம் முடித்த நிலையில் தினமும் இருவரும்

சண்டைகள் பிடிப்பதாக அயலில் வசிப்போர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய தினமும் சண்டை ஏற்படவே விரக்தியில் மனைவி

25 மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இந் நிலையில் அவரை மீட்டு வைத்தியசாலையில்

சேர்த்ததாக அயல் வீட்டுக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கணவனை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை

மேற்கொண்டு வருவதுடன் அவரை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்

தெரிவிக்கின்றனர்.​

Previous articleலண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 5 வயது இந்திய வம்சாவளி சிறுமி!
Next articleகால்வாய் ஒன்றில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்!