ராகு காலம், எமகண்டம். குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது

நல்ல காரியம் செய்வதற்கு முன்பு நேரம் காலம் பார்த்து தொடங்கினால் அந்த காரியம் வெற்றிகரமாக முடியும்.

ராகு காலம், எமகண்டம், அர்த்தபிரகணன்,காலன் காலம் ஆகிய இந்த நான்கும் நால்வர் காலம். இந்த காலங்களில் நல்ல காரியம் செய்வதை பலரும் தவிர்த்து விடுவார்கள்.

ஏன் இந்த காலங்களில் நல்லது செய்யக்கூடாது குளிகை காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

குளிகை செய்யக்கூடாது காலம் மீண்டும் என்ன நேரம் இந்த செய்தல் செய்யலாம் ராகு காலம், எமகண்டம். குளிகை காலத்தில் என்ன செய்யலாம்

ராகுகாலம் ராகுவின் ஆதிக்கம் கொண்ட நேரம், எமகண்டம் எமனின் ஆதிக்கம் உடைய நேரம். இந்த எமன் குரு பகவானின் துணை கிரகம்.

இதில் ராகுகாலம் எமகண்டம் பெரும்பாலானோருக்கு தெரியும். அப்போது சுப காரியங்கள் செய்யக்கூடாது, பயணங்கள் கூடாது.

புதிய பொருட்கள் வாங்குவது என எந்த விஷயத்தையும் செய்யக்கூடாது என அறிந்திருப்பீர்கள்.

அரத்தபிரகணன் புதனின் பார்வை பெற்ற ஒரு கோள். காலன் காலம் சூரியனின் எதிர் குணம் கொண்ட சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கோள். இந்த அர்த்தபிரகணன், காலன் காலம் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அறிந்திராத ஒன்று.

என்ன செய்யக்கூடாது
குளிகை செய்யக்கூடாது காலம் மீண்டும் என்ன நேரம் இந்த செய்தல் செய்யலாம் ராகு காலம், எமகண்டம். குளிகை காலத்தில் என்ன செய்யலாம்
அரத்தபிரகணன் என்னும் நேரத்தில் செய்யக்கூடாதவை என்ன என்றால் சுபகாரியங்கள் மட்டுமல்ல, கல்வி சம்பந்தபட்ட எந்தக் காரியமும் தொடங்கக்கூடாது.

முதன்முதலான பள்ளியில் குழந்தைகளின் சேர்க்கை, உயர்கல்வியில் சேருதல், புதிய பயிற்சி வகுப்பில் சேருதல், புதிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்தல் போன்றவற்றை ஆரம்பிக்கக்கூடாது.

காலன் காலம் காலத்திலும் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது, முக்கியமாக பயணங்கள் செய்யக்கூடாது, மருத்துவ சிகிச்சை ஆரம்பிக்கக்கூடாது, மருந்துண்ண ஆரம்பிக்கக்கூடாது.

குளிகை நேரம் என்ன செய்யலாம்
குளிகை செய்யக்கூடாது காலம் மீண்டும் என்ன நேரம் இந்த செய்தல் செய்யலாம் ராகு காலம், எமகண்டம். குளிகை காலத்தில் என்ன செய்யலாம்
இந்த நால்வர் காலத்தோடு இணையாமல் தனித்து இருப்பது குளிகை நேரம் மட்டுமே. இது ஏன் தனித்து இருக்கிறது? காரணம் இது சுப நேரம் என்பதால்தான்.

குளிகை காலத்தில் சவ அடக்கம் செய்ய சவத்தை எடுக்கக்கூடாது. குளிகை நேரத்தில் செய்யப்படும் ஒரு காரியம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும்.

எனவே சவம் எடுப்பது குளிகை நேரமாக இருந்தால் மீண்டும் மீண்டும் அதே சம்பவம் நடக்கும் என்பதால் குளிகை நேரத்தை தவிர்ப்பார்கள்.

திருமணம் செய்யக்கூடாது
குளிகை செய்யக்கூடாது காலம் மீண்டும் என்ன நேரம் இந்த செய்தல் செய்யலாம் ராகு காலம், எமகண்டம். குளிகை காலத்தில் என்ன செய்யலாம்
குளிகை நேரத்தில் திருமணம் செய்யக்கூடாது, பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்றவைகள் செய்யக்கூடாது,அப்படி செய்தால் மீண்டும் மீண்டும் திருமணம் செய்கின்ற நிலை உண்டாகும்.

பெண் பார்ப்பது போன்றவை செய்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். எதுவும் கைகூடி வராது. ஏதாவது காரணங்களால் தள்ளிக்கோண்டே போகும்.

நல்லது நடத்தும் குளிகை காலம்

குளிகை காலத்தில் வேலையில் சேரலாம், பதவி உயர்வு பெற்று பதவி ஏற்கும் போது குளிகை நேரத்தில் பதவி ஏற்றுக்கொண்டால் மீண்டும் மீண்டும் பதவி உயர்வு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

வீடு கிரகப்பிரவேசம் செய்தல், நிலம் வீடு வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல் போன்றவை செய்யலாம். நிறைய வீடு வாங்குவீர்கள், நிலபுலங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

கடன் அடைக்கலாம்

பணச்சுமை தீரவேண்டும், மன அமைதி வேண்டும் என்று தவிப்பவர்கள், உங்கள் கடனில் சிறு பகுதியை திரும்பிச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும் ,மன நிம்மதி உண்டாகும்.

குழந்தைகள்பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தல், புது வங்கிக்கணக்கு ஆரம்பித்தல், புதிய தொழில் தொடங்குதல், நிறுவனங்கள் ஆரம்பித்தல், ஆடை ஆபரணங்கள் வாங்குதல், தங்கத்தில் முதலீடு செய்தல், விவசாய அறுவடை செய்தல் போன்றவை தாராளமாகச் செய்யலாம் ராகு காலம் எமகண்டம் குளிகை காலம்.

Previous articleகொள்ளையிடப்பட்ட தொலைபேசிகளின் EMI இலக்கங்கள் பொலிஸ் இணையத்தளத்தில்!
Next articleயாழ்.சாவகச்சேரியில் வீதியால் சென்ற இரு இளைஞர்களை வழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துக் கொளுத்திய காவாலிகள்!