இரண்டு கால்களும் செயலிழந்த தாயை முட்புதரில் விட்டுச் சென்ற மகன்!

இந்தியாவில் இரண்டு கால்களும் செயலிழந்த தாயை முட்புதரில் விட்டுச் சென்ற கொடுமையான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தில் இடம்பெறுள்ளது.

அதன்படி, குறித்த கிராமத்திலுள்ள சில பெண்கள் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு முட்புதரில் அழுகை சத்தம் கேட்டது.

அந்த பெண்கள் முட்புதருக்கு சென்று பார்த்தபோது ஒரு மூதாட்டி அங்கிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இரண்டு கால்களும் செயலிழந்த நிலையிலிருந்த அந்த மூதாட்டியை அங்கிருந்து மீட்டு தூக்கி வந்த அவர்கள் பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

அந்த மூதாட்டியின் பெயர் காந்திமதி என்பதும் அவர் சென்னை அடுத்த மணலி அருகே உள்ள பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவரது மூத்த மகன் பெயர் ரவி, கொத்தனார் வேலை செய்து வருகிறார், இளைய மகன் பெயர் சங்கர் குறி சொல்பவர் என்பதும் தெரிய வந்தது.

தனது இளைய மகன் சங்கர் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இங்கு அழைத்து வந்து முட்புதரில் போட்டு விட்டு சென்றதாகவும் அந்த மூதாட்டி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மூதாட்டியை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெற்ற மகனே வயதான தாயை கொஞ்சமும் இரக்கமில்லாமல் முட்புதரில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்திய மீனவர்களுக்கு ஒரு நீதி இலங்கை மீனவர்களுக்கு ஒரு நீதியா?
Next articleயாழில் புதுவருட தினத்தில் மனைவியை நிர்வாணமாக ஓடவிட்டு தாக்கிய கணவன், அயல் வீட்டு பெண்கள் அப்பெண் மீது இருந்த உடைகளை போர்த்தி காப்பாற்றிய சோகம்