யாழில் 5000 ரூபா பெறாத குடும்பங்களுக்கான முக்கியசெய்தி!

யாழ் மாவட்டத்தில், 5000 ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனை தெரிவித்துள்ளார். , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 148,178 குடும்பங்கள் 5 ஆயிரம் ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவுக்காக தகுதி பெற்றுள்ளன.

அவற்றில் 111,855 குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

Previous articleபாகிஸ்தானில் சமூக வலைதளங்கள் அனைத்தும் முடக்கம்!
Next articleபிரதமர் தலைமையில் தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு!