சற்றுமுன் மேலும் 168 பேருக்கு கொரோனா!

இலங்கையில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 96,356 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Previous articleமுள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரை திறம்படச் செயற்பட்ட மருத்துவர் அருள் காலமானார்!
Next articleஓட்டமாவடியில் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் சறுக்கி ஒருவர் பலி!