மூத்த மருத்துவ போராளி அருள் உயிரிழப்பு!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை நேசித்த மற்றுமொரு மருத்துவ போராளியான அருள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்போராட்டத்தில் சுமார் இரு தசாப்தங்களாக மருத்துவ போராளியாக பணியாற்றிய மருத்துவர் அருள் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மருத்துவ போராளியான அருள் என்றழைக்கப்படும் இராசையா யதீந்திரா போராளிகளினதும் மக்களினதும் இறுதி யுத்தம் வரையாக உயிரைக் காத்த ஒரு மருத்துவர் என நண்பர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.

மேலும் விபத்தொன்றில் காயமடைந்த மருத்துவர் அருள் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleகொழும்பில் திடீரென ஒன்றுகூடிய 20 க்கும் மேற்பட்ட அழகிகளால் பெரும் சர்ச்சை!
Next articleபுற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய்; இலங்கை சுங்கம் விடுத்த அறிவிப்பு