யாழில் சற்றுமுன் மேலும் 12 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் ஆகியவற்றில் 636 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன் முடிவுகளின்படி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை உள்ள தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, கைதடி அரச திணைக்களம் ஒன்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுன் இவர்கள், திருநெல்வேலி பாரதிபுரம் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கு தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநான் செய்த ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்!
Next articleதிருமண மேடையில் காத்திருந்த மணமகள் : குப்பையில் கிடந்த நகையால் நடந்த திருமணம்