இந்தியாவின் மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது .
ஊரடங்கு காரணமாக மதுபானம் அருந்த கிடைக்காததால், சானிட்டைசரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது .
இந்தியாவின் மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தின் வாணி கிராமத்தில் நேற்று பிற்பகல் சானிட்டைசரைக் குடித்த பின்னர் குறித்த மூவரும் வாய், வயிறு போன்ற பகுதிகளில் தீக்காயங்கள் தொடர்பான புகார்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .