சற்றுமுன் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவது தொடர்பில் வெளியான தகவல்!

நடைபெற்று முடிந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை சகோதர ஊடகமொன்றுக்கு இன்று தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான பணிகள் இறுதி கட்டத்தினை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான திகதிகளை மாற்றுவதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

Previous articleமுல்லைத்தீவில் காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி!
Next articleஇலங்கையில் திடீரென எகிறும் கொரோன தொற்று – சற்றுமுன் மேலும் 650 பேர் அடையாளம் காணப்பட்டனர்