கொழும்பு மேற்கு களுபோவில வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இருப்பிலுள்ள அத்தனை ஒட்சிசன் சிலிண்டர்களும் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் முதித்தா பெரேரா தெரிவிக்கின்றார்.
இதேவேளை வைத்தியசாலையில் 80 சிலிண்டர்கள் உள்ளபோதிலும் மேலதிகமாக 150 சிலிண்டர்கள் அவசியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.