பிரான்ஸில் இலங்கைப் பெண் ஒருவர் கழுத்து வெட்டிக் கொலை!

பிரான்ஸின் பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கை யைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடுமென்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடியாக உறுதி செய்யமுடியவில்லை. அவரது பெயர் விவரங்களும் வெளியிடப்
படவில்லை.

மேலும் கொலை நடந்த நாளில் குறித்த பெண்ணுடன் காணப்பட்டவரெனக் கூறப்படுகின்ற இலங்கையரான ஆண் ஒருவரை விசாரணையாளர்கள் கைது செய்ததை அடுத்தே பெண்ணின் சடலம் சிலவாரங்களின் பின்னர் அடையாளம் காணப்பட் டுள்ளது.

அத்தோடு கொலையுண்ட பெண் சார்ஸல் பகுதியில் கத்தோலிக்க சமூக நல அமைப்பு ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற வதிவிடத்தில் வசித்து வந்த காரணத்தால் அவர் காணாமற்போன விடயம் உடனடியாக எவருக்கும் தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது.

பாரிஸில் உள்ள வசிப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்தே கொலையுடன் தொடர்புடைய 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும்உஅவரது தொலை பேசி மூலமாகக் கிடைத்த முக்கிய தகவல்கள் பெண்ணின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிய உதவி உள்ளன.
அத்தோடு தடுப்புக் காவலில் விசாரணை செய்த சமயத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டார்.

Previous articleஇலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு தொற்று!
Next articleமுக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பேணாமலும் வந்த பயணிகள் கடுமையாக எச்சரிக்கை!