கொரோனா அச்சம் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை திறப்பது குறித்து அடுத்தவாரம் கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
நாடு முழுவதிலும் பாடசாலைகள் நேற்று முதல் வருகின்ற 30ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 02ஆம் திகதி இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.