இன்றய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1000 ஐ அண்மித்தது!

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.

இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,475 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 227 பேர் குணமடைந்தனர்.

தொற்று நோய் தடுப்புப் பிரிவில் நாளாந்தம் வெளியிடப்படும் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 95,083 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுறுதியான 8,737 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleகிளிநொச்சியில் வீட்டிலிருந்தோர் மீது வாள் வெட்டு தாக்குதல்!
Next articleதமிழக்தில் உச்சம்கொரோனா அச்சுறுத்தல் உதவிக் கரம் நீட்டும் சர்வதேச நாடுகள்!