இந்தியாவில் மணிக்கு 180 கோவிட் மரணங்கள் : உலகில் ஆபத்தான நிலையில் இந்தியா

இந்தியாவில் கோவிட் வைரஸ் பரவலின் காரணமாக ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 115 பேர் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

தற்போது இந்தியாவில் நிலமை கைமீறி போய்விட்டது என்ற அடிப்படையில் பல்வேறு சர்வதேச நாடுகள் ஆதரவு கரங்களை நீட்டியிருக்கின்றன.

இந்நிலையில், கோவிட் தொற்று மையம் கொண்டிருக்கும் பிரதான களப்பகுதியே தென்னாசியா தான் என கனடாவில் இருக்கும் மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தென்னாசியாவில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிகளவான தொற்றினை வெளிப்படுத்துகின்றன. இந்த நிலையில் இலங்கை இந்தியா போன்று அபாயகரமான தொற்று நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த நாட்களில் இந்தியாவில் எவ்வாறு தொற்றாளர்கள் படிப்படியாக அதிகரித்துச் சென்றனரோ அவ்வாறு இலங்கையிலும் படிப்படியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் செல்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous articleதொற்றாளர்கள் அதிகளவு அடையாளம் காணப்படும் இடங்கள் மட்டும் முடக்கப்படும்!
Next articleஇலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 7,481 பேருக்கு கோவிட்!