இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 7,481 பேருக்கு கோவிட்!

இலங்கையில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 7 ஆயிரத்து 481 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று இரண்டாவது நாளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்தத் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தின் பின்னர் கோவிட் தொற்றாளர்களின் தொகை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது 9 ஆயிரத்து 209 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleஇந்தியாவில் மணிக்கு 180 கோவிட் மரணங்கள் : உலகில் ஆபத்தான நிலையில் இந்தியா
Next articleஇரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தாய்!