தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சாதனை செய்து பின் இயக்குனராக களமிறங்கியவர் கே.வி. ஆனந்த்.
அயன், கவண் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு அதிகாலை 3 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.