பிலியந்தல பொலிஸ் பகுதி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது.
புத்தளத்தில் ஊடகங்களுடன் பேசிய பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, பிலியந்தல பொலிஸ் பகுதி தொடர்பான சுகாதார பிரிவுகள் எடுத்த முடிவு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தனிமைப்படுத்தும் உத்தரவுகள் தொடர்பான முடிவுகளை அரசியல் அதிகாரத்தால் மாற்ற முடியாது. சுகாதார அமைச்சர் தவிர்ந்த வேறு அமைச்சர் இதில் முடிவுகளை எடுக்க முடியாது.
முடிவுகள் தொழில்நுட்ப அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. தற்போதைய தேவை காரணமாக தனிமைப்படுத்தும் உத்தரவுகளை விதிக்க சுகாதார மருத்துவ அதிகாரியின் கோரிக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
மார்ச் 2020 இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி தற்போது தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. முடிவுகளை எட்டுவதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அதிகாரங்கள் உள்ளன.
பிலியந்தலை பொலிஸ் பிரிவிலுள்ள 42 கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, மறுநாள் காலை அமைச்சர் காமினி லொக்குகேவின் தலையீட்டினால் அந்த பகுதிகள் விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.