மட்டக்களப்பில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 3 வயது குழந்தை பலி!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் வாகனேரி பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து 3 வயது பிள்ளை உயிரிழந்துள்ளது.

விக்னேஸ்வரன் லக்சிகா (3) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளது.

இன்று காலை சிறார்கள் வீட்டின் முன் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில், தமது 3 வயது பிள்ளையை காணாத பெற்றோர் தேடுதல் நடத்திய போது, நீர் நிரம்பிய குழிக்குள் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

கிணறு வெட்டப்பட்டு, பாதுகாப்பு கட்டுக்கள் கட்டப்படாமல் இருந்த நிலையில் குழநதை அதற்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

Previous articleஅரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleபிசிஆர் சோதனையில் ஆசிரியைக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பிஎச்ஐக்கு பிணை!