இலங்கையின் அடுத்த சட்டமா அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது பதில் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துவரும் சஞ்ஜய் ராஜரட்ணமே இவ்வாறு அடுத்த சட்டமா அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி அரசாங்கம் இவரது பெயரை பிரேரித்து அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தற்போதைய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.