ஒன்ராறியோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை 3 166 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் நேற்று 2 864 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிகளவில் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளதை அடுத்தும், வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாலும், நாளாந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.