வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா!

வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (29.05) இரவு வெளியாகின.

அதில் தோணிக்கல் பகுதியில் 2 வயது மற்றும் 9 வயது சிறுவர்கள் உட்பட 4 பேருக்கும், மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் 3 வயது மற்றும் 8 வயது சிறுவர்கள் இருவருக்கும்,

ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள இஸ்லாமிய கலாசார மண்டபம் முன்பாகவுள்ள பிரபல பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்றில் இருவருக்கும், தவசிகுளம் பகுதியில் ஒருவருக்கும், நவகமுக பகுதியில் ஒருவருக்கும்,

திருவேகம பகுதியில் ஒருவருக்கும், நெடுங்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும், தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும்,

ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், பெரிய கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒருவருக்கும் என 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.