இன்று மேலும் 1,531 பேருக்கு கோவிட் தொற்று!

நாட்டில் மேலும் 1,531 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 184,983 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து, சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 30,802 ஆக அதிகரித்துள்ளது.