மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

#குருநாகல் நாரம்மல பொலிஸ் பிரிவில் (விசிநவ) அகார கொளனியில் இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மடலஸ்ஸ, ஹுஸைனியா அரபுக் கல்லூரி மாணவன் அல் ஹாபிழ் மொஹமத் (வயது 18) மற்றும் எலபடகமயைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்போது அகார பகுதியில் வாடகை வீட்டில் வாழும் ரிப்னாஸ் (வயது 17) ஆகிய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

குளத்தில் இருந்த பாசி படிந்த கல்லில் ஒருவர் வழுக்கி விழ அவரைக் காப்பாற்ற மற்றவர் முயன்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.