சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை செலுத்தும் நடவடிக்கை இன்று (08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்மைய, கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை கொழும்பு – ஜிந்துபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்தார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில், சைனோபாம் தடுப்பூசியின் முதல் மாத்திரையைப் பெற்றுக் கொண்ட 90,000 பேருக்கே இரண்டாம் மாத்திரை ஏற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்