கொவிட் தொற்றால் கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,388பேர் பாதிப்பு- 52பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 96ஆயிரத்து 798பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 25ஆயிரத்து 843பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 20ஆயிரத்து 377பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 873பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 13இலட்சத்து 50ஆயிரத்து 578பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.