இம் மாத இறுதிவரை பயணத்தடை நீடிக்கப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை இம்மாத இறுதிவரை நீடிப்பதற்கான வாய்புகள் உள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தொிவிக்கின்றன. இந்நிலையில் இன்று அல்லது நாளை கூடவுள்ள தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் கூட்டத்தில் அது குறித்த தீர்மானம் எடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

நாட்டில் தொற்று நில வரத்தை பார்க்கும் போது பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது நல்லது அல்ல என சுகாதார தரப்பினர்சுட்டிக்காட்டியுள்ளனர். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் தொற்று நிலைமை குறைவடையும் வரையில் நாட்டில் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டாம் என்றே கூறி வருகின்றனர்.

இதன்படி மே 21 ஆம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் தொடர்வதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் அதனை மேலும் நீடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக இன்று அல்லது நாளைய தினத்தில் கோவிட் தடுப்பு செயலணி கூடி தீர்மானம் எடுக்கவுள்ளது. ஜுன் 21 ஆம் திகதி வரையில் கட்டுப்பாட்டை நீடிப்பதற்கு இதன்போது தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் நிலைமையை ஆராய்ந்து அதன் பின்னர் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன