முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலையின் தற்காலிக கட்டடம் ஒன்று விசமிகளால் தீ வைப்பு!

முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலையின் தற்காலிக கட்டடம் ஒன்று இன்று சனிக்கிழமை காலை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீ விபத்து தொடர்பில் பாடசாலை அதிபரால் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதா? அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

பயணத்தடை விதிக்கப்பட்டு பாடசாலை மூடப்பட்டுள்ள வேளையில் இன்று காலை பாடசாலைக்கு அதிபர் சென்று பார்வையிட்ட போது தற்காலிக கட்டடம் தீயில் எரிந்துள்ளது.

இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் 24 கதிரைகள், 20 மேசைகள், 4 கரும்பலைககள் என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.