இன்றயை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,098 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 367 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,098 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 241,820 ஆக அதிகரித்துள்ளது.