ஆவரங்கால் விபத்தில் பருத்தித்துறை இளைஞர் உயிரிழப்பு!

ஆவரங்கால் விபத்தில் பருத்தித்துறை இளைஞர் உயிரிழப்பு !

ஆவரங்கால் பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் விபத்தில் பருத்தித்துறை இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்

ஆவரங்கால் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற முச்சக்கர வண்டி – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை 4-00 மணியளவில் உயிரிழந்தார்.

இச் சம்பவத்தில் பருத்தித்துறை 2 ம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்த செல்வம் விஜயகுமார் [வயது 40 ] என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்