வவுனியாவில் திருடுபோகும் மோட்டார் சைக்கிள்கள்!

வவுனியா நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் நேற்றையதினம் திருடப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் காவலாளியின் மோட்டார் சைக்கிள் நேற்று திருடப்பட்டுள்ளது.

அதேபோன்று வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வியாபார நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.