கொரோனா சிகிச்சை விடுதிக்குள் புகுந்த விசர் நாய்!

மாத்தறை – மொரவக்க -கொஸ்நில்கொட வைத்தியசாலை கொரோனா தொற்று நோயாளர் சிகிச்சை விடுதிக்குள் புகுந்த விசர் நாய் ஒன்று அங்கு சிகிச்சை பெற்றுவந்த 3 நோயாளர்களை கடித்துக் குதறியது.

சம்பவத்தின்போது 38 தொற்று நோயாளிகள் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வெளியேற தயாராக இருந்தவர்களாவர்.

விடுதிக்குள் புகுந்த நாய் அங்கிருந்த 3 பெண்களைக் கடித்தது. பின்னர் அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நாயை மருத்துவமனை வளாகத்தில் இருந்து இருந்து வெளியே துரத்தினர்.

இதனைத் தொடர்ந்து அந்த நாய் கிராமத்தவர்களால் அடித்துக் கொல்லப்பட்டது.