அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவருகின்றது.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்பு – ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.
ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ள மீனவர்கள், இவ் விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
உடனடியாக ஸ்த்தலத்திற்கு விஜயம் செய்த உத்தியோகத்தர்கள் ஆமையை பார்வையிட்டதுடன், அதனை பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.