தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகளே கரையொதுங்கியுள்ளன – மீதம் எங்கே?

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து 40 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் மாத்திரமே கரையொதுங்கியுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய 60 வீதமான பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பாக உரிய தரவுகள் கிடைக்கவில்லை என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

கரையொதுங்கிய ஆயிரத்து 34 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் 44 கொள்கலன்களில் வத்தளை பகுதியிலுள்ள களஞ்சியசாலை ஒன்றில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.