சூட்கேசில் மனைவியை வைத்து எரித்த கணவன்!

திருப்பதியில் காதல் மனைவியைக் கொலை செய்து சூட்கேசில் வைத்து, ரூயா மருத்துவமனை வளாகத்துக்கு எடுத்துச் சென்று தீயிட்டு எரித்த சம்பவம் தொடா்பாக கணவனை ஆந்திர பொலிஸாா் கைது செய்தனா்.

அதுகுறித்து ,திருப்பதி நகா் காவல் கண்காணிப்பாளா் வெங்கட அப்பலநாயுடு கூறியதாவது: திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 23 ஆம் திகதி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு சூட்கேசில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பொலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.