நாட்டில் மேலும் 1,022 பேருக்கு கொவிட்!

நாட்டில் மேலும் 1,022 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 265, 079 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் 1,923 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.

அதன்படி, இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 233,317 ஆக அதிகரித்தது.