யாழ்.மாவட்டத்தில் 32 பேர் உட்பட வடக்கில் 60 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 32 பேர் உட்பட வடக்கில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணி கூறியுள்ளது.

செயலணியின் நாளாந்த நிலவர அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதன்படி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 32 பேர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர், வவுனியா மாவட்டத்தில் 18 பேர், மற்றும் மன்னார் மாவட்டத்தில் 08 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.