கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, உதயநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 61வயது மதிக்கத்தக்க முதியவரே இன்றைய தினம் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இத்தகவலை கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்