வவுனியாவில் கொரோனா பரவலையடுத்து சதொச கிளை உட்பட எட்டு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன!

கொரோனா பரவலையடுத்து வவுனியா நகர சதொச கிளை மற்றும் நவீன சந்தைப் பகுதியில் உள்ள ஏழு கடைகளும் நேற்று (03.07.2021) மாலை மூடப்பட்டன .

வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் முடிவுகள் நேற்று மாலை வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதோச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் நவீன சந்தை தொகுதியில் 7 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த ஊழியர்களை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்,

அவர்களுடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை மற்றும் ஏனையகடை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடைகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளன.