யாழ்.அச்சுவேலயில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு!

யாழ்.அச்சுவேலி – கதிரிப்பாய் பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்று காலை மீட்கப்பட்டிருக்கின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்.அச்சுவேலி – கதிரிப்பாய் பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் துப்பரவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வெடிக்காத நிலையில் குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் குறித்த குண்டினை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.