மேலும் 38 கொவிட் மரணங்கள்!

நாட்டில் மேலும் 38 கொவிட் மரணங்கள் நேற்று (6) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 21 ஆண்களும், 17பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொவிட் தொற்றினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3, 351ஆக அதிகரித்துள்ளது.