கிளிநொச்சியில் ஆசிரியர்களிற்கு தடுப்பு ஊசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

ஆசிரியர்களுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் இன்று(08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், சாந்தபுரம் இராணுவ வைத்தியசாலை, பூநகரி உள்ளிட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம் பெற்று வரும் நிலையில், இன்று முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.