அமைச்சராக பதவியேற்கமுன் பசில் வெளியிட்ட அறிக்கை

தன்னை நாடாளுமன்றத்திற்கு வரும்படி அழைத்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷ நன்றி கூறியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் அவர் இன்று அறிக்கையொன்றை பிரசுரித்துள்ளார்.

நாளைய தினம் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்கவுள்ள பஷில் ராஜபக்ஷ, தனக்காக பதவியை இராஜினாமா செய்த ஜயந்த கெட்டகொடவுக்கும் நன்றியை தெரிவித்திருக்கின்றார்.