இரசாயன உரம் இறக்குமதி செய்ய அனுமதி!

இரசாயன உரம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள ஊடக செய்திகள் பொய்யானவை என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறான எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை எனவும் எதிர்காலத்தில் அப்படி அனுமதி வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வௌியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது