முல்லைத்தீவில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் எனும் 14 வயது மாணவன் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நேற்று(10) இரவு 7 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக செல்வதாக கூறிச்சென்ற மாணவனை காணவில்லை என மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.