கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 986 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 274,017ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றின் காரணமாக இன்னும் 26 ஆயிரத்து 78 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.