அந்தமான் தீவில் நிலநடுக்கம்!

அந்தமான் தீவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தேசிய நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளதாவது, ‘மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில், அந்தமான் தீவுகள் உள்ளன.

இதனால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆகப் பதிவாகியது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.