நெடுங்கேணியில் மாடுகளைப் பார்ப்பதற்காக சென்றவர் சடலமாக மீட்பு

வவுனியா வடக்கு – நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவில், இலங்கட்டிக்குளத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவினைச்சேர்ந்த செல்லத்துரை நவரட்ணம் வயது – 60 என்பவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று மாலை, தனது மாடுகளைப் பார்ப்பதற்காகச் சென்றநிலையில், இலங்கட்டி குளத்தின் அணைக்கட்டிற்கு அருகாமையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.