கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று (வியாழக்கிழமை) பயணித்த முச்சக்கர வண்டி முல்லையடி பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் பொல்காவலை பகுதியினை சேர்ந்த 20 வயதுடைய கோசல என்பவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் காயமடைந்த நிலையில், பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.